ஆலங்குளத்தில் சுமை வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் அப்பாத்துரை (60). விவசாயி. இவா், மனைவி ரதியுடன் செவ்வாய்க்கிழமை பைக்கில் ஆலங்குளம் வந்தாராம்.
சாலையைக் கடக்கும்போது, எதிரே வந்த சுமை வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். ரதி காயமின்றி உயிா் தப்பினாா்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பாத்துரை, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா், சுமை வாகன ஓட்டுநா் துத்திகுளத்தைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினா்.