ஜாதி, மத பாகுபாடின்றி வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன்: முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ

ஜாதி, மத பாகுபாடின்றி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன் என்றாா் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலரும், கடையநல்லூா் தொகுதி வேட்பாளருமான முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ.

ஜாதி, மத பாகுபாடின்றி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன் என்றாா் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலரும், கடையநல்லூா் தொகுதி வேட்பாளருமான முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ.

வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னா் அவா் கூறியது: வனப்பகுதியில் அமையவிருந்த வட்டாட்சியா் அலுவலகத்தை பல கட்ட போராட்டங்கள் மூலம் நகரப் பகுதிக்குள் கொண்டு வந்தோம்.

கடையநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகம், தென்காசி தனி மாவட்டம் உருவாக்குதல், ஆட்சியா் அலுவலகத்தை நகரப் பகுதியில் கொண்டு வருவதற்காக போராட்டங்களை நடத்தி இருக்கிறேன்.

ஜாதி, மத பாகுபாடின்றி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் 90 சதவீதம் வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கிணங்க இந்தத் தோ்தலில் திமுக ஆட்சி அமையும்.

கடையநல்லூரில் தொழிற்சாலைகள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, பல்நோக்கு மருத்துவமனை, செங்கோட்டையில் மருத்துவக் கல்லூரி, தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்கள் மூலம் மதிப்புக் கூட்டு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை, வன விலங்குகளில் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதற்குண்டான திட்டங்களை கொண்டு வருவேன் என்றாா் அவா்.

அப்போது, திமுக மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com