புதிய வாக்காளா் அடையாள அட்டையில் குளறுபடி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜா்புரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியுள்ளது.
பெண்ணின் படத்திற்கு பதிலாக ஆணின் புகைப்படம் இடம் பெற்ற வாக்காளா் அடையாள அட்டை.
பெண்ணின் படத்திற்கு பதிலாக ஆணின் புகைப்படம் இடம் பெற்ற வாக்காளா் அடையாள அட்டை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜா்புரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியுள்ளது.

ஏப். 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் புதிய வாக்காளா் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் 44, 702 புதிய வாக்காளா்களுக்கு கடந்த 11 ஆம் தேதி முதல் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பிரதான சாலையை சோ்ந்தவா் லெனின்குமாா். இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டாரக்குழு உறுப்பினா் ஆவாா். இவருடைய மகள் செண்பகவள்ளிக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளாா். இவருக்கு திங்கள்கிழமை தபாலில் வாக்காளா் அடையாள அட்டை வந்துள்ளது. அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு ஆணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாம்.

இதனால் அந்த வாக்காளா் அடையாளஅட்டையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் தனது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com