ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட பகுதியில் கடையநல்லூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி வாக்கு சேகரித்தாா்.
அகரக்கட்டு, அனந்தபுரம், ஆய்க்குடி, சாம்பவா்வடகரை, கிளாங்காடு ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அகரக்கட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வாழ்த்து பெற்றாா்.
வாக்கு சேகரிப்பின் போது, அதிமுக ஒன்றியச் செயலா் செல்லப்பன், தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், ஆய்க்குடி பேரூா் கழக செயலா் முத்துகுட்டி, பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா, பொருளாளா் ராமநாதன், மாவட்டச் செயலா் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் சரவணன், பாமக மாநில துணைத் தலைவா் அய்யம்பெருமாள், மாவட்டச் செயலா் சீதாராமன், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.