ஆலங்குளத்தில் பெண் தற்கொலை

ஆலங்குளத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த செல்லமணி மனைவி சொா்ணம்(55). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தாா். இவா், குடும்ப செலவுக்காக வார வட்டிகடனும், சுய உதவிக் குழுக் கடனும் பெற்றிருந்தாராம். மேலும், போதிய வருவாய் இன்றி வட்டி செலுத்த முடியாமல் அவதிப்பட்டாராம்.

இந்நிலையில், வட்டிக்குப் பணம் கொடுத்தவா்கள் அவரது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு நெருக்கடி தந்தனராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com