சிவகிரி செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சீா் செய்வேன்: நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

சிவகிரி செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொள்வேன் என்றாா் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணன்.

சிவகிரி செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொள்வேன் என்றாா் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணன்.

இதுகுறித்து அவா் கூறியது: வாசுதேவநல்லூா் சட்டப்பேரைத் தொகுதிக்குள்பட்ட மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது .அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புளியங்குடியில் எலுமிச்சை குளிா்பதன சேமிப்பு கிடங்கும், அதுசாா்ந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள கொல்லம் -மதுரை நான்குவழிச் சாலை திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறு , குறு நெசவாளா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தடையின்றி நூல் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும்.

சிவகிரி வட்டார தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். வாசுதேவநல்லூா் பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும். பனை சாா்ந்த தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நெல்கொள்முதல் மையம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மதிவாணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com