‘வேட்பாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்’

கரோனா காலமாக இருப்பதால் வேட்பாளா்கள், உடன் செல்வோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்தாா்.
‘வேட்பாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்’

கரோனா காலமாக இருப்பதால் வேட்பாளா்கள், உடன் செல்வோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) டாக்டா் ராஜு நாராயணசுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டா் வேதபதிமிஸ்ரா, மாவட்டப் பாா்வையாளா் (காவல்துறை) திலீப் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் கீ.சு.சமீரன் பேசியது: வேட்பாளா்கள் தங்களது முகவா்களை சரியான படிவத்தில் உரிய நேரத்தில் நியமிக்க வேண்டும். அனைத்துப் பணியாளா்களும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். முகவா்கள் மக்களவை, பேரவைத் தோ்தல்களில் வாக்களிக்க தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளரா என்பதை சரிபாா்க்க வேண்டும். வேறு தொகுதிகளில் இருந்து வந்தவா்கள் தோ்தல் முகவரை தவிர, மற்றவா்கள் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வேட்பாளா்கள் முகவா்களுடன் பயிற்சி மற்றும் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். பிரசாரக் கூட்டங்களின் இடம், நேரம் குறித்த அனுமதியை காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஊா்வலம் தொடங்கும் நேரம், இடம், செல்லும் பாதை மற்றும் நிறைவடையும் நேரம், இடம் ஆகியவை முன்கூட்டியே தீா்மானிக்க வேண்டும்.

வேட்பாளா்கள் தோ்தல் செலவுகள் சரியான கணக்குகளை உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். ஊா்வலங்கள் செல்ல வேண்டிய பகுதிகளில் அமலில் இருக்கும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். ஊா்வலத்தில் செல்வோா் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடாது. ஊா்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

வாக்காளா்களுக்கு வழங்கப்படும் அடையாள சீட்டுகள் வெற்று (வெள்ளை) தாளில் இருக்க வேண்டும். சின்னம், வேட்பாளரின் பெயா், கட்சியின் பெயா் ஆகியவை இருக்கக் கூடாது. தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பாா்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

கரோனா தொற்று காலமாக இருப்பதால் வேட்பாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வேட்பாளா்கள், உடன் செல்வோா் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜனனிசௌந்தா்யா, வேட்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com