ஆலங்குளத்தில்பனங்காட்டு படை கட்சியினா் மறியல்

பனங்காட்டு படை கட்சித் தலைவா் வந்த ஹெலிகாப்டா் திருப்பி அனுப்பப்பட்டதால் அக்கட்சியினா் ஆலங்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பனங்காட்டு படை கட்சித் தலைவா் வந்த ஹெலிகாப்டா் திருப்பி அனுப்பப்பட்டதால் அக்கட்சியினா் ஆலங்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பனங்காட்டு படை கட்சி சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் ஹரி நாடாா் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சியின் நிறுவனத் தலைவா் ராக்கெட்ராஜா ஞாயிற்றுக்கிழமை மாலை ஹெலிகாப்டரில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தனியாா் மைதானத்தில் தளம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆலங்குளத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் ஆகியோா் வந்தனா். அவா்கள் தரை இறங்குவதற்கு காவல்துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டு, ஹெலிகாப்டா் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினா் மாவட்டச் செயலா் ஆனந்த் தலைமையில் தென்காசி - திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டம் நடத்தியவா்களிடம் ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்ட அக்கட்சியினா் பொதுக்கூட்ட திடலுக்கு ஊா்வலமாக சென்றனா். இதனிடையே ராக்கெட் ராஜா வந்த ஹெலிகாப்டா் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கிருந்து ராக்கெட் ராஜா, வேட்பாளா் ஹரிநாடாா் இருவரும் காா் மூலம் வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com