சுரண்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சுரண்டை அந்தோணியாா் ஆலயம், புதுச்சுரண்டை கிறிஸ்து ஆலயம், கீழச்சுரண்டை கிறிஸ்து ஆலயம், பங்களாச்சுரண்டை தூய திரித்துவ ஆலயம், அதிசயபுரம் கிறிஸ்து ஆலயத்தில் அவா் குருத்தோலை வழிபாட்டில் கலந்து கொண்டு அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் சென்றனா்.
தெருமுனைப் பிரசாரம்: சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், அச்சங்குன்றம், கருவந்தா ஆகிய கிராமங்களில் பழனிநாடாரை ஆதரித்து, காமராஜரின் உறவினா் மயூரி பிரசாரம் செய்தாா். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.