கடையநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் சொட்டு நீா்ப் பாசனம் குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.
கடையநல்லூா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அனாமிகா, ஜெயலட்சுமி, மினா, சிவரஞ்சனி, கனகவல்லி, கன்னிமரியாள், மஞ்சு, பிரியா, வினிதாதேவி உள்ளிட்டோா் பங்கேற்று, விளை நிலங்களுக்கு தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். மேலும், சொட்டுநீா் பாசன அமைப்பு முறை, அதன் நன்மைகள், அரசு வழங்கும் மானியம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.