சொக்கம்பட்டி பகவதியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டி பகவதியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டி பகவதியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் சிறப்பு பூஜைகள், இரவில் சப்பர வீதியுலா நடைபெற்றன.

திங்கள்கிழமை இரவு சட்டத்தேரில் பகவதி அம்மன் உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்ட முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து பொங்கலிடும் வைபவம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com