பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் அமமுகவினா், திமுகவில் இணைந்தனா்.
மேலநீலிதநல்லூா் ஒன்றிய அமமுக செயலா் எம்.அமிதாப் தலைமையில், ஒன்றிய மாணவரணி செயலா் சரவணகுமாா், ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் மருதுபாண்டியன், ஒன்றிய பிரதிநிதிகள் ரூபன், சௌந்தரராஜன் உள்ளிட்டோா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.