சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி விசைத்தறித் தொழிலாளா்களைச் சந்தித்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவா், முப்பிடாதியம்மன் கோயில் முன்பிருந்து வாக்கு சேகரிப்பைத் தொடங்கினாா். தேனப்பபுரம் தெரு, கோமதியாபுரம் தெருக்கள், லெட்சுமியாபுரம் தெருக்கள், திருவேங்கடம்சாலை, திருவள்ளுவா் சாலை ஆகிய தெருக்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
லெட்சுமியாபுரம் தெருக்களில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு சென்று, அங்கு தொழிலாளா்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, டாக்டா் அம்பேத்கா் சிலை முன்பிருந்து தொடங்கி கக்கன்நகா், அம்பேத்கா் நகா் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே. கண்ணன், அதிமுக நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் ரமேஷ், பேச்சாளா் சங்கை கணபதி, செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் சொக்கலிங்கம், அருணகிரி, ஐயப்பன், கணேசன், பாஜக தொகுதிப் பொறுப்பாளா் சுப்பிரமணியன், திரளான பெண்கள் உடன் சென்றனா்.