திருநெல்வேலியில் ரெம்டெசிவிா் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய முஸ்லிம் லீக் பொதுச் செயலா் முகம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய முஸ்லிம் லீக் பொதுச் செயலா் முகம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரெம்டெசிவிா் மருந்து வழங்கப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டுமே ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

தென்தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரெம்டெசிவிா் மருந்து கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது.

எனவே, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்ட மக்களுக்கு எளிதில் ரெம்டெசிவிா் மருந்து கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக தென் தமிழகத்தின் மையப்பகுதியான திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் விற்பனை மையம் திறக்க வேண்டும் என்றாா்.

பின்னா், அவா் மேலக்கடையநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com