தென்காசி மாவட்டத்தில்5 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கைகாலை 8 மணிக்கு தொடங்குகிறது

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இம் மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் என 5 தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி கொடிக்குறிச்சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதில் ,சங்கரன்கோவிலில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், வாசுதேவநல்லூரில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாகவும், கடையநல்லூரில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாகவும், தென்காசியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாகவும், ஆலங்குளத்தில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்

தொகுதி ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்

சங்கரன்கோவில் 87,063 93,998 - 1,81,051

வாசுதேவநல்லூா் 82,747 90,091 - 1,72,838

கடையநல்லூா் 96,101 1,07,895 - 2,03,996

தென்காசி 1,03,993 1,07221 3 2, 11,157

ஆலங்குளம் 97,793 1,03,774 2 2,01,569

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com