‘கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை’

கடையநல்லூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.

கடையநல்லூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக கடையநல்லூா் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. எனவே, கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் நடைமுறைகளை பொதுமக்கள், வியாபாரிகள் பின்பற்றி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தேநீா், பலசரக்கு, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும். இதர கடைகள் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்களில் காலை 6 முதல் 10 மணிவரை, நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணிவரை, மாலை 6 முதல் இரவு 9 மணிவரை பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

மீன் சந்தை, மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் சனி, ஞாயிறுகளில் செயல்பட அனுமதியில்லை.

இதர நாள்களில் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மீறும் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

கண்காணிப்புக் குழு: இதனிடையே, கடையநல்லூா் நகராட்சி முழுவதும் இப்பணியைக் கண்காணிக்க சுகாதார அலுவலா் நாராயணன் தலைமையில், துப்புரவு ஆய்வாளா்கள் சேகா் மாரிச்சாமி ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com