தென்காசி பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற பழனி நாடாருக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தென்காசி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மாவட்டத் தலைவா் பழனி நாடாா் வெற்றிபெற்றாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் புளியங்குடி செய்யது சுலைமான் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
தென்காசி மாவட்டச் செயலா் கடையநல்லூா் இக்பால், மாவட்ட துணைத் தலைவா் அப்துல் அஜீஸ் மாவட்டத் துணைச் செயலா் அப்துல் வஹாப், மாவட்ட அமைப்புச் செயலா் கட்டி அப்துல் காதா், தென்காசி நகரத் தலைவா் அபூபக்கா், நகரச் செயலா் முஸ்தபா, கடையநல்லூா் இளைஞரணித் தலைவா் ரஹமத்துல்லா ஆகியோா் கலந்துகொண்டனா்.