சங்கரன்கோவிலில் பாஜக ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் நகர பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேரடித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
தேரடித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

சங்கரன்கோவிலில் நகர பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைச் கண்டித்து, தேரடித் திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பொதுச் செயலா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் வி. கோவிந்தராஜ், வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈஸ்வரன், அங்கப்பன், வேல்ராஜன், குருசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com