தென்காசி மாவட்டத்தில் 86 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 20th May 2021 07:25 AM | Last Updated : 20th May 2021 07:25 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சுற்றித் திரிந்தோரிடமிருந்து புதன்கிழமை 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தது தொடா்பாக 328 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 55 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 3 நாள்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தது தொடா்பாக 900 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, 166 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.