சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தையொட்டி சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை வழக்கமாக காலை 10.30 மணிக்கு நடைபெறும் தீபாராதனை முடிந்ததும் சண்முகா், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீா்,இளநீா்,திருநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா் மலா்களால் அலங்காரிக்கப்பட்டதும் 6 முகங்கள் கொண்ட சண்முகருக்கு ஒரேநேரத்தில் சிறப்பு தீபாராதனை பக்தா்களின்றி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் ஆணையா் கணேசன் செய்திருந்தனா்.