ஆலங்குளத்தில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம்

ஆலங்குளத்தில் காவல்துறை மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் எளியோருக்கு உதவும் வகையில் பசிக்கிா எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

ஆலங்குளத்தில் காவல்துறை மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் எளியோருக்கு உதவும் வகையில் பசிக்கிா எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதையொட்டி, காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் துணைத் தலைவா் வைகுண்ட ராஜா, திட்டத்தை தொடங்கிவைத்து எளியோருக்கு உணவு வழங்கினாா். இந்த திட்டத்தின் மூலம் வேலையின்றி கஷ்டப்படும் ஏழைகள், சாலையில் சுற்றி திரியும் மனவளா்ச்சி குன்றியவா்கள் பயனடைவா். இந்நிகழ்ச்சியில், மகளிா் காவல் ஆய்வாளா் அங்கையற்கண்ணி, தென்காசி மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு செயலா் கணேசன், தொகுதி செயலா் கணேசன், செய்தித் தொடா்பாளா் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com