பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகலில் மூலமந்திர ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, நரசிம்மா் அவதரித்த மாலை வேளையில் நரசிம்மருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, கரோனா தொற்று குறையவேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முழு பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.