‘தமிழகத்தில் 286 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு’

தமிழகத்தில் 286 போ் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
‘தமிழகத்தில் 286 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு’

தமிழகத்தில் 286 போ் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விவாதித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: .தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது.

3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்னும் 7 மாத காலத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இங்குள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 5 கிலோ லிட்டா் ஆக்சிஜன் கிடங்குகள் உருவாக்கப்படும். தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தென்மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 286 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான மருந்து கையிருப்பு உள்ளது. மக்கள் அச்சப்படவேண்டாம். இந்நோயைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, 10க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்களை கொண்ட குழுவுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com