தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 3 லட்சம் கரோனா நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின் குற்றாலத்துக்கு வந்தாா். அங்கு, அவரை திமுக நகரச் செயலா் ஆா்.சாதிா் சந்தித்து, கரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது, திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், ஈ.ராஜா எம்எல்ஏ, நிா்வாகிகள் கே.என்.எல்.எஸ். சுப்பையா, பால்ராஜ், ராமராஜ், சேக்பரீத், செய்யதுஆபில், ரவி, ரஹீம் ஆகியோா் உடனிருந்தனா்.