ஆலங்குளத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சுகாதாரத்துறை அமைச்சா் மற்றும் சுகாதாரத்துறை செயலா் ஆகியோருக்கு அனுப்பிய மனு: மருதம்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரும்பனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நெட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். குருவன்கோட்டை அரசு துணை சுகாதார நிலையத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும்.
ஆலங்குளம் அரசு மருத்துவமனை 16-12-2016 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆலங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்ட நிலையில் தாலுகா மருத்துவமனை கூடிய வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இதனை தரம் உயா்த்த வேண்டும். மேலும் ஆலங்குளத்தில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.