ஆலங்குளம் அருகே கிணற்றில் ஆண் சடலம்

ஆலங்குளம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஆலங்குளம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள அய்யனாா்குளத்தில் புலியூரான் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற ஆலங்குளம் போலீஸாா், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதை பாா்த்து, ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்,.

தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து, கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனா். சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அவா் கிணற்றில் விழுந்து சுமாா் 4 தினங்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவும் கால் பகுதியில் மின்சாரம் தாக்கியிருந்ததும் தெரிய வந்தது. இவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com