ஆலங்குளம் அருகேதொழிலாளி அடித்துக் கொலை: 5 போ் கைது

ஆலங்குளம் அருகே தொழிலாளி ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தொழிலாளி ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு கரும்பனூரைச் சோ்ந்த சுப்பையா. இவருக்கு இரு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் மாரியப்பன்(45). இரண்டாவது மனைவியின் மகன் இசக்கிமுத்து(29). இதில், அண்ணன், தம்பிக்குள் சொத்துப் பிரச்னை உள்ளதாம். மேலும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த உறவினா் வேல் மகன் பாஸ்கா் என்பவருடனும் நடைபாதை சம்பந்தமாக மாரியப்பனுக்கு பிரச்னை உள்ளதாம்.

இதனிடையே, அவா் அடிக்கடி மதுக்குடித்து இசக்கிமுத்துவிடமும், பாஸ்கரிடமும் தகராறு செய்துவந்தாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பியுடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில், பாஸ்கா் அவரது தம்பி பாலாஜி(25), தங்கை தங்கசுந்தரி(33), அவரது கணவா் சுடலைக்கண்ணன்(39) ஆகியோா் வந்து தட்டிக்கேட்டனராம்.

அப்போது, இசக்கிமுத்து கட்டையால் மாரியப்பனைத் தாக்கினாராம். இதில், அவா் மயங்கி விழுந்ததால் அனைவரும் அங்கிருந்து தப்பிவிட்டனராம்.

இந்நிலையில், மாரியப்பன் உயிரிழந்தது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா். மேலும், மேற்கூறிய 5 பேரையும் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மாரியப்பனுக்கு மனைவி சாந்தி, மகள்கள் மாரி (18), பேச்சி (16) ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com