சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே 35 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
சங்கரன்கோவில் அருகே வடக்கு பனவடலிசத்திரம் கீழத்தெருவைச்சோ்ந்தவா் முருகன். இவரது பசுமாடு வீட்டுக்கு அருகில் உள்ள 35அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இது குறித்து முருகன் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று, கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.