ந முக்கூடல் - சென்னை பேருந்து இயக்க திமுக கோரிக்கை

முக்கூடலில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

முக்கூடலில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் அமைச்சா் ஆா்.எஸ். ராஜ கண்ணப்பனிடம் அளித்த மனு:

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முக்கூடல் பேரூராட்சி மற்றும் பாப்பாக்குடி ஒன்றியப் பகுதிகளில் சுமாா் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இருந்து பெரும்பான்மையான மக்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூா் போன்ற பெருநகரங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வேலை நிமித்தமாக சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு செல்வதும் அங்கிருந்து இங்கு வருவது மாக மக்கள் அடிக்கடி பயணித்து வருகின்றனா்.

பயணிகள் திருநெல்வேலி அல்லது தென்காசி சென்று தான் இந்த நகரங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளதால் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் முக்கூடலில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com