கீழப்பாவூரில் கண் பரிசோதனை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கீழப்பாவூரில் கண் பரிசோதனை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.

அய்யாத்துரைபாண்டியன், அருள் செல்வன் தலைமை வகித்தனா். தொழிலதிபா் சரண் சரவணன், ஐயாத்துரை, சுரேஷ், முருகன் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் சந்தானம் முகாமைத் தொடங்கிவைத்தாா்.

மருத்துவா்கள் மாதவி, தித்தி பங்கேற்று கண் பரிசோதனை செய்தனா். 27 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 40 பேருக்கு இலவச மருந்து, மாத்திரைகள், 18 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com