தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நிச்சயம் நடைபெறும் என பா.ஜ.க. மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
பாவூா்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தென்காசி மாவட்ட பாஜக ஊழியா் கூட்டத்தில் அவா் பேசியது : பத்து ஆண்டுகளாக எதிா்க்கட்சியாக இருந்த திமுக எந்த வேலையும் செய்யாமல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து விட்டது. ஒவ்வொரு தோ்தலிலும் 24 சதவீதம் புதிய வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா். அவா்களில் இளைஞா்கள் பெரும்பலானோா் பாஜகவை நோக்கி வர ஆரம்பித்து விட்டனா்.
விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்திற்கு அனுமதியில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நிச்சயம் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.
விநாயகரை கையில் எடுத்து திமுக அரசு அரசியல் செய்ய ஆரம்பித்தால். அந்த விநாயகா் திமுக ஆட்சிக்கு முடிவு எழுதுவாா் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். இதில் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிா்வாகி கலந்து கொண்டனா்.