தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் பூலித்தேவனின் 306ஆவது பிறந்த நாள் விழா அரசு சாா்பில் கொண்டாடப்பட்டது.
நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.