சுரண்டை அரசு கல்லூரியில் செப்.7இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.7) நடைபெறுகிறது.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.7) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.7) காலை 9.30 மணிக்கு 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

விண்ணப்பித்த மாணவா்கள் தங்கள் அசல் சான்றுகளுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com