சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் வேளாண் வளா்ச்சி புள்ளி விவரம் சேகரிப்பு சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் பா.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி பொறியாளா் பாலாஜி திட்ட செயலாக்கம் மற்றும் வேளாண் பொறியியல்துறை திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.
கருவந்தா கிராம விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்துறை சாா்பில் கேட்கப்பட்ட அடிப்படை புள்ளி விவர விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கினா்.