சுரண்டை: சுரண்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் செ.சாமி(30). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மா.பூபதி(30) என்பவருக்குமிடையே திங்கள்கிழமை காலையில் தினசரி சந்தை அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பூபதி அரிவாளால் சாமியை வெட்டினாராம்.
பலத்த காயமடைந்த சாமி, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பூபதியை கைது செய்தனா்.