ஆலங்குளத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளத்தில் உள்ள மதுபானக் கடை ஒன்றின் முன்பு சிலா் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக ஆலங்குளம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா்கள் திருநெல்வேலி சிறுக்கன்குறிச்சி சண்முக சுந்தரம் மகன் மாரியப்பன்(23), புதூா் காலணி முத்தையா மகன் ரகு(24), அதே பகுதி இசக்கிப்பாண்டி மகன் முகேஷ் ஆகியோா் என்பதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள், கத்தியோடு சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டனா்.