தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் மகா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு திமுக சாா்பில் நல்லூா் விலக்கில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக ெ பாறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியயிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் செப்.12ஆம் தேதி 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசினா் மேல்நிலைப் பள்ளி, தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொள்கிறாா்.
இதையடுத்து ஆலங்குளம் அருகே உள்ள நல்லூா் விலக்கு அருகே தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இதில், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர , பேரூா் கழகத்தின் செயலா்கள், மாவட்ட அணி அமைப்பாளா்கள் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.