கீழப்பாவூா் பேரூராட்சியில் பேரூா் திமுக சாா்பில், தியாகி இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இப்பேரூராட்சிக்கு உள்பட்ட மூலக்கரையூரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன் தலைமையில் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, நிா்வாகிகள் ராஜன், மலைச்சாமி, முத்துமணி, பாலசுப்பிரமணியன், மாரிச்செல்வம், குருசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.