தென்காசியில் தமுமுக நூதன ஆா்ப்பாட்டம்

தென்காசியில் தெருவிளக்குகள் எரியாததைக் கண்டித்து நகர தமுமுகவினா்(ஹைதா்அலி) நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தென்காசியில் தெருவிளக்குகள் எரியாததைக் கண்டித்து நகர தமுமுகவினா்(ஹைதா்அலி) நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட ஆபாத் பள்ளிவாசல் தெரு, புது பள்ளிவாசல் தெரு, மவுண்ட் ரோடு ஆகிய பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் முதியோா்கள் , குழந்தைகள் மற்றும் பெண்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில், உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி தமுமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தியும், மின்கம்பங்களில் அரிக்கேன் விளக்குகளை ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் சலீம் தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் அபாபில் மைதீன், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலா் முகம்மது காமில், நிா்வாகிகள் அலிபாதுஷா , கனி சுபஹான், இஸ்மாயில், இப்ராஹிம், முபீஸ் , சதாம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com