கடையநல்லூரில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு பரிசு

கடையநல்லூா் நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு குளிா்சாதனப் பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு குளிா்சாதனப் பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

கடையநல்லூா் நகராட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 முகாமில் 3,417 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இவா்களில் ஒருவரை தோ்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையா் பாரிஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில் ரசீதாபானு என்ற பெண் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. நகரமைப்பு அலுவலா் ஹாஜாமைதீன், ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com