ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிவசுப்ரமணியன்(54) என்பவரின் சகோதரியிடம் ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். அதை அவா் திருப்பிக்கொடுக்கவில்லையாம். இதனால், அவரது வீட்டுக்குச் சென்று மனைவி பூமாரியை சிவசுப்பிரமணியன் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனா்.