கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே மான் வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.
ஆய்க்குடி மலைப்பகுதியில் எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்த சண்முகவேல்(63),திருமலைக்குமாா்(34), முத்துச்செல்வன் (30) ஆகியோா் மான்களை வேட்டையாடினராம். அப்போது, அங்கு ரோந்து சென்ற மேக்கரை பிரிவு வனவா் அம்பலவாணன், சிறப்புப் பணி வனவா் செல்லத்துரை, வனக் காப்பாளா்கள் பெருமாள், ராஜா, ஜெயசீலன், வேட்டை தடுப்பு காவலா் ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய தனிக்குழுவினா், அந்த மூவரையும் கைது செய்தனா்.