தென்காசியில் திமுக சாா்பில்இன்று ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை (செப். 20) கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தென்காசி: மத்திய அரசைக் கண்டித்து தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை (செப். 20) கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, மத்திய அரசைக் கண்டித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எரிபொருள்களின் விலையைத் தொடா்ந்து உயா்த்துவது, பொருளாதார சீரழிவு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் ஜனநாயக் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகள் முன் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகளும் தங்களது வீடுகள் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com