முக்கூடல் அருகே ஆடு திருட்டு: 2 போ் கைது

முக்கூடல் அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம்: முக்கூடல் அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தன்மேடையைச் சோ்ந்த மகாராஜன்(36) என்பவா் தனக்குச் சொந்தமான 5 ஆடுகளை உறவினா் சந்தனமாரியிடம் கொடுத்து வளா்த்து வருகிறாா்.

அந்த ஆடுகளை முக்கூடல் தாம்போதி பாலம் அருகே சந்தனமாரி சனிக்கிழமை மேய்த்துக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 3 போ் மூன்று ஆடுகளை திருடிச் சென்றனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், வீரவநல்லூரைச் சோ்ந்த முருகேசன் என்ற பஞ்ச் பாலா(19), தா்மராஜ், அரிகேசவநல்லூா் மகேஷ் முத்து(23) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், ஒரு ஆட்டை மீட்டனா்; பைக்கை பறிமுதல் செய்தனா். மகேஷை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com