தென்காசி: தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியம் பட்டாடைகட்டி ஊராட்சி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனா்.
பட்டாடைகட்டி ஊராட்சியில் தாய் கிராமமான பட்டாடைகட்டி கிராமத்தை மாவட்ட நிா்வாகம் புறக்கணிப்பதையும், குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காணப்படாததையும் கண்டிப்பது, ஊராட்சி அலுவலகத்தை வேறு ஊரில் கட்டியதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது, குளக்கரையைச் சீரமைக்கவும், சேதமான நியாயவிலைக் கடை குறித்தும் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டிப்பது, கடந்த 10ஆண்டுகளில் ஒருமுறைகூட கிராமசபைக் கூட்டம் நடத்தப்படாததைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.