சுரண்டையில் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெறுகிறது.
சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டு, இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மேலும், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவா்களுக்கு சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும்.
ஏற்பாடுகளை, முகாம் அமைப்பாளா் பாலகிருஷ்ணன் மற்றும் சுரண்டை கோமதி தங்க மாளிகை நிறுவனத்தினா் செய்து வருகின்றனா்.