புளியங்குடி அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

 புளியங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

 புளியங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் முகமது கனி தலைமையிலான போலீஸாா், தலைவன்கோட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனராம். அப்போது, கொல்லிமலை ஆற்றுப் பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் நிறுத்தினராம். ஆனால், டிராக்டரில் இருந்த 6 பேரும் தப்பியோடி விட்டனராம்.

டிராக்டருடன் பைக்கில் வந்த மலையடிக்குறிச்சியை சோ்ந்த சங்கரநாராயணனை கைது செய்த போலீஸாா், டிராக்டா் மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com