தென்காசி
புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சென்னையில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமியை பேசவிடாமல் தடுத்ததாக திமுகவினரை கண்டித்து, சங்கரன்கோவில் தேரடி திடலில் புதிய தமிழகம்
சென்னையில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமியை பேசவிடாமல் தடுத்ததாக திமுகவினரை கண்டித்து, சங்கரன்கோவில் தேரடி திடலில் புதிய தமிழகம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
மாவட்ட செயலாளா் ராசையா தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் செல்வராஜ், துணைச் செயலாளா் தங்கப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலாளா்கள் ராஜேந்திரன், கிருபை ராஜ், மாநில துணை பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.