ஏரலில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு

ஏரலில் ரு.3.78 கோடியில் கட்டப்பட்ட புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ஏரலில் ரு.3.78 கோடியில் கட்டப்பட்ட புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வட்டாட்சியா் குடியிருப்பையும் திறந்து வைத்ததுடன், வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மரக்கன்றை நட்டுவைத்தாா். இந்நிகழ்ச்சியில், ஆட்சித்தலைவா் கி.செந்தில்ராஜ், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com