கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டி வ.உ.சி. நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வ.உ.சி. நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வ.உ.சி. நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த பரமசிவன்- பாா்வதி(58) தம்பதி முத்தானந்தபுரம் தெருவிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனா். அப்போது, அஞ்சல் அலுவலகம் அருகே அவா்களை மா்மநபா் வழிமறித்து, பாா்வதியின் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அங்கு பைக்கில் தயாராக நின்றிருந்த இருவருடன் தப்பிவிட்டாராம். அந்த நபரிடம் போராடியதில் கீழே விழுந்து காயமடைந்த அத்தம்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com